தையிட்டியை இலக்கு வைத்த சவேந்திர சில்வா: அம்பலமாகும் பெரும் இரகசியம்
இலங்கையின் அரசியல்களத்தில் கடந்த வாரத்தை பொறுத்தவரையில் தமிழர் தாயகத்தில் கட்டப்பட்ட தையிட்டி விகாரை மிகவும் பேசுபொருளாகியுள்ளது.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தொடர்ச்சியாக பௌத்த மயமாக்கல் இடம்பெற்று வருவதாக தமிழர் தரப்பு தொடர்ச்சியாக குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வரும் நிலையில், மக்களின் நிலங்களை ஆக்கிரமித்து, பௌத்த விகாரை நிர்மாணிக்கப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, கடந்த 11, 12ஆம் திகதிகளில் போராட்டம் நடைபெற்றன.
இந்நிலையில், சவேந்திர சில்வா தான் ஜனாதிபதியாக வர வேண்டும் என்பதற்காக இனவாதத் கையெழுடுத்தார்.
ஜேவிபிக்கும் சவேந்திர சில்வாவிற்கும்(Shavendra Silva) இடையிலான பிரச்சினைதான் இந்த தையிட்டி பிரச்சினையாகும் என அரசறிவியல் ஆசான் என அழைக்கபடும் மு. திருநாவுக்கரசு தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் அலசி ஆராய்கின்றது இன்றைய ஊடறுப்பு….