சம்பந்தனின் இறுதி கிரியையில் தமிழக பாரதிய ஜனதா கட்சி தலைவர் அஞ்சலி

TrincomaleeR. SampanthanRanil WickremesingheK. Annamalai
 2 hours ago

Independent Writer

Independent Writer

in பாதுகாப்பு

Join us on our WhatsApp Group

Courtesy: H A Roshan

தமிழ் தேசிய கூட்டமைப்பின் சிரேஷ்ட தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான இராஜவரோதயம் சம்மந்தனின் இறுதி கிரியை நிகழ்வில் தமிழக பாரதிய ஜனதா கட்சி தலைவர் அண்ணாமலை கலந்துக்கொண்டுள்ளார்.

இன்னும் சற்று நேரத்தில் ஜனாதிபதி அவர்களும் கலந்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், இராஜவரோதயம் சம்மந்தனின் இறுதி கிரியைகள் திருகோணமலையில் உள்ள இந்து மயானத்தில் இன்று(07) மாலை நடைபெறவுள்ளது.

சம்பந்தனின் இறுதி கிரியையில் தமிழக பாரதிய ஜனதா கட்சி தலைவர் அஞ்சலி | Security To Be Strengthened In Trincomalee

முதலாம் இணைப்பு

தமிழ் தேசிய கூட்டமைப்பின் சிரேஷ்ட தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான இராஜவரோதயம் சம்மந்தனின் இறுதி கிரியை நிகழ்வில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பாரதிய ஜனதா கட்சி தமிழக தலைவர் அண்ணாமலை பங்கேற்கவுள்ள நிலையில் திருகோணமலையில் பலத்த பாதுகாப்பு முன்னனெடுக்கப்பட்டுள்ளது.

இராணுவம் மற்றும் பொலிஸார் இணைந்து திருகோணமலை நகர் முழுதும் குறித்த பாதுகாப்பு பணியை முன்னெடுத்துள்ளனர்.

சம்பந்தன் அவர்களின் இறுதி கிரியைகளுக்கு மக்களை ஏற்றுவதற்காக கிழக்கு மாகாண பேருந்து சாலைகளில் இருந்து பேருந்துகளை கிழக்கு மாகாண சபை தயார் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இராஜவரோதயம் சம்மந்தனின் இறுதி கிரியைகள் திருகோணமலையில் உள்ள இந்து மயானத்தில் இன்று(07) மாலை நடைபெறவுள்ளது.

 

சம்பந்தனின் பூதவுடலுக்கு நாமல் இறுதி அஞ்சலி

சம்பந்தனின் பூதவுடலுக்கு நாமல் இறுதி அஞ்சலி

 

இறுதி கிரியை

குறித்த இறுதி கிரியை நிகழ்வுக்கான ஏற்பாடுகள் இடம் பெற்று வருவதுடன் பெருந்திரளான மக்கள் அஞ்சலி செலித்தியும் வருகின்றனர்.

அரசியல் பிரமுகர்கள், முப்படைகளின் உயரதிகாரிகள், என பலரும் திருகோணமலையில் உள்ள அன்னாரது இல்லத்தில் பூதவுடல் வைக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டு வருகின்றது.

சம்பந்தனின் இறுதி கிரியையில் தமிழக பாரதிய ஜனதா கட்சி தலைவர் அஞ்சலி | Security To Be Strengthened In Trincomalee

 

இறுதி கிரியைக்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பாரதிய ஜனதா கட்சி தமிழக தலைவர் அண்ணாமலை பங்கேற்கவுள்ள நிலையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

 

மட்டக்களப்பில் இடம்பெற்ற சம்பந்தனின் நினைவேந்தல்

மட்டக்களப்பில் இடம்பெற்ற சம்பந்தனின் நினைவேந்தல்

 

இரங்கல் பதாகை

மேலும், திருகோணமலை நகர் முழுதும் இரங்கல் தெரிவித்து  இரா. சம்மந்தனின் உருவப்படம் பொறித்த பதாகைகள் தொங்கவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பந்தனின் இறுதி கிரியையில் தமிழக பாரதிய ஜனதா கட்சி தலைவர் அஞ்சலி | Security To Be Strengthened In Trincomalee

இதில் தென்னிலங்கையை சேர்ந்த அரசியல் பிரமுகர்கள், வடகிழக்கு மலையகத்தை சேர்ந்த மக்கள் பிரதிநிதிகள் என பலரும் மேலும் கலந்து கொள்ளவுள்ளனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை உடல் நலக்குறைவு காரணமாக கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனையில் அமரர் இரா. சம்பந்தன் இயற்கை எய்தினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

சம்பந்தனின் மறைவு ஆழமான உணர்வுகளை தோற்றுவித்துள்ளது: ஶ்ரீகாந்தா

சம்பந்தனின் மறைவு ஆழமான உணர்வுகளை தோற்றுவித்துள்ளது: ஶ்ரீகாந்தா

 

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW  

GalleryGalleryGalleryGallery

Author